காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்பதற்காக முன்ஜாமீன் வழங்க கூடாது - உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
புதுடெல்லி: போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க தேவை இல்லை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து முன்ஜாமீன் வழங்க கூடாது என உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பர்திவாலாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment