பாரத் மாதா கி ஜெய் சொல்லும் போது... - சிறுபான்மையின பிரதமர் விவாதம் குறித்து விவேக் அக்னிஹோத்திரி கருத்து
புதுடெல்லி: "இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் “பாரத் மாதா கீ ஜெய்”, “வந்தே மாதரம்”எனச் சொல்லும் போது இந்தியா ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ளும்" என்று திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நிலவி வந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் முடிவுக்கு வந்த நிலையில் திங்கள்கிழமை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், செவ்வாய்கிழமை இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராகி இருப்பது கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அது இந்தியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியும் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment