வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
டாடா நிறுவனமும், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்க உள்ளன. தனியார் துறைக்கு சொந்தமான நாட்டின் முதல் ராணுவ விமானத் தயாரிப்பு நிறுவனமான இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) அடிக்கல் நாட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment