வானியல் நிகழ்வான பகுதி சூரிய கிரகணம் இன்று (அக்.25) நடைபெற உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் என்பது குறிப்பிட்டத்தக்கது. இது பகுதி சூரிய கிரகணம் தான் என்றாலும் கூட இதைத் தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரிய கிரகணம் என்றால் என்ன? சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment