சூரஜ்கண்ட் (ஹரியாணா): நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-யின் கிளைகள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையின்போது பிரதர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் இன்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “தீவிரவாதத்தை முற்றாக எதிர்க்கும் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது. இதற்காக, என்.ஐ.ஏ உள்ளிட்ட நாட்டின் புலன் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment