உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை எடுப்போம்: ஜி-20 தலைமை இந்தியாவுக்கு பெருமை - 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
புதுடெல்லி: ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது பெருமை அளிக்கிறது. அதன் மூலம் உலக நன்மைக்கு வழிகாட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வானொலியில் நேற்று ஒலிபரப்பான 95-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது. வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. ஜி-20 தலைமை இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நன்மை, ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா வழிகாட்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment