குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ரூகர் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. இங்கு விடுதியில் தங்கிப் படித்து வந்த வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆனந்த் சர்மாவை, சீனியர் மாணவர்கள் நேற்று ராகிங் செய்துள்ளனர். அவர்களின் ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க, பல்கலைக்கழகத்தின் 2-வது மாடியில் இருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவரை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். இதுகுறித்து மாணவரின் தாய் சரிதா சர்மா போலீஸில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment