டேராடூன்: பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ கட்சிக்குள் ஊடுருவியுள்ளன. அவர்கள் எல்லா வகையிலும் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கரண் மகாரா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் பலரை பாஜக நுழைத்துள்ளது. அவர்கள் பாஜக ஆதரவாளர்கள். காங்கிரஸை வலுப்படுத்த யார் முயன்றாலும் அவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள் அல்லது வலுப்படுத்த முயற்சிப்பவர் மீது களங்கம் சுமத்துவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment