புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாடுளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கரோனா பரவலை எதிர்கொள்ள இந்தியா தாயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சி ஒத்திகை நடத்தப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகையை நேரில் ஆய்வு செய்தார்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் லட்சக்கணக்கான பேர் ஒமிக்ரானின் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300க்கும் குறைவாக உள்ள நிலையில், புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாக கண்டறியப்படவில்லை. இந்தியாவில் தற்போது கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என நிபுணர்கள் கருத்து கூறிவந்தாலும், மத்திய சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment