Skip to main content

புதிதாக சிந்தியுங்கள், முன்னேறுங்கள் - கர்நாடக மாணவர்களுக்கு அமித் ஷா அறிவுரை

ஹப்பள்ளி: கர்நாடகா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹப்பள்ளியில் உள்ள பிவிபி பொறியியல் கல்லூரியில் நடந்த அமிர்த மகோத்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியதாவது:

நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த உன்னத தியாகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். நாட்டுக்காக உங்கள் வாழ்வை தியாகம் செய்ய முடியாது என்றால், நாட்டுக்காக நீங்கள் வாழ்ந்து, நம் நாட்டை உலகின் முதல் நாடாக ஆக்க வேண்டும். இதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உங்களுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார். வடக்கு கர்நாடகாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி நீங்கள் புதிதாக சிந்தித்து முன்னேற வேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது. இந்த வாய்ப்புகள் மாணவர்களுக்குதான் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular posts from this blog

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 நவம்பர் 2025

மேஷம்: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரம், அலுவலகத்தில் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் இரண்டரை மடங்கு அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

‘ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்’ என்ற தலைப்பில் வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு, ‘பி.எம்.கிஸான் சம்மான் நிதி’ திட்டம் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் இதே நாளில் தொடங்கப்பட்டது. இதில் விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்குரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்