புதுடெல்லி: பாகிஸ்தானின் செயல்பாடுகள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால் அதை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இமயமலையின் மேற்கு பகுதியில் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் ஓடுகின்றன. இந்த நதிகளில் பாயும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வது, தண்ணீர் அளவு
சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே, உலக வங்கியின் மேற்பார்வையில் கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 9 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி மேற்கு பகுதி ஆறுகளில் ஓடும் நீரில் இருந்து இந்தியா மின்சாரம் உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றுள்ளது. இந்த நதிகளின் பாயும் தண்ணீரில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment