ரூபாவிடம் ரூ.1 கோடி கேட்டு ரோஹினி சிந்தூரி மானநஷ்ட வழக்கு - மார்ச் 7-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ், தனது தனிப்பட்டபுகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
சசிகலா மீது சிறை முறைகேடு புகாரை தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா, க‌ர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது ஊழல், நிர்வாக முறைகேடு, ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டினார். அவர் மீது கர்நாடக தலைமைச் செயலரிடம் 19 விதமான புகார்களை தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment