புதுடெல்லி: வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதையொட்டி டெல்லியில், ‘மன் கி பாத்-100' என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ரவீணா டாண்டன், விளையாட்டு வீராங்கனைகள் தீபா மாலிக், நிகத் ஜரீன், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment