ரஜவுரி: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கடந்த 20-ம் தேதி நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் தீவிரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டிஜிபி தில்பக் நேற்று கூறியதாவது:
ராணுவ வாகனத்தின் மீது 3 முதல் 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் தீவிரவாதிகளுக்கு 3 மாதங்களாக உணவு, தங்குமிடம் கொடுத்து வழிகாட்டியுள்ளனர். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் வந்துள்ளன. அதை உள்ளூர் நபர்கள் எடுத்து, தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளனர். காடுகளுக்கு அருகில் உள்ள இடங்களை, தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் தேர்வு செய்கின்றனர். அங்கு அவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு கிடைக்கிறது, தப்பிச் செல்ல வழி இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment