சென்னை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தின் சார்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பிரதான ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ-யின் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிர்வாகம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முடக்கியது. இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு, ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், "ட்விட்டர் கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும். இதில் ட்விட்டர் நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த விதியை மீறும் வகையில் உங்கள் கணக்கு இருப்பதால், அது முடக்கப்படுகிறது. பின்னர் உங்கள் கணக்கு டெலிட் செய்யப்படும்" என தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment