பஞ்சாப் | கிரிக்கெட் வீரருக்கு அரசு வேலை வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டார் முன்னாள் முதல்வரின் உறவினர்
சங்குரூர்: கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் நெருங்கிய உறவினர் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் என முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தின் திர்பா மற்றும் சீமா ஆகிய பகுதிகளில் அரசு அலுவலக வளாகங்கள் கட்டுவதற்கு முதல்வர் பகவந்த்மான் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன் தரம்சாலா சென்றிருந்தபோது, பஞ்சாப் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரரை சந்தித்தேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment