புதுடெல்லி: விடுதலைப்புலிகள் அமைப்பை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டது தொர்பான வழக்கில் இலங்கையை சேர்ந்த 10 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை புதுப்பிக்கும் சதிச் செயல் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ கடந்த 2022, ஜூலையில் பதிவு செய்து 13 பேரை கைதுசெய்தது. இந்நிலையில் இவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment