ஹைதராபாத்: வாடகை வீடுகளில் 16 பேர் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்கு மாடி வீட்டை உயர்த்த முயன்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையைவிட தாழ்வான நிலைக்கு மாறின. இதன்காரணமாக மழை பெய்தபோது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment