பாட்னா: நிதிஷ்குமார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, இக்கூட்டத்தை நடத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் செய்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment