புதுடெல்லி: கலிங்கப் போரால் பாடம் கற்ற பின் போர் நடத்தாமலேயே மவுரியப் பேரரசை கட்டிக் காத்தார் மாமன்னர் அசோகர். அவரது தலைநகரான பாடலிபுத்திரம் எனும் பாட்னா, ஓர் அரசியல் போருக்கு தயாராகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் இதை முன்னின்று நடத்துகின்றனர்.
இக்கூட்டத்தில், மாநில முதல்வர்களான தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் சிங் மான், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அகிலேஷ் சிங் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரும் ஒன்று கூடுகின்றனர். சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 18 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கூடுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment