இம்பால்: மணிப்பூரில் இரு சமுதாயத்தினர் இடையிலான மோதல் முற்றுகிறது. குடியிருப்பு பகுதிகளின் பெயர் பலகைகளை பரஸ்பரம் அழித்து தங்கள் சமுதாய பெயரை சூட்டுகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த மே 3-ம் தேதி அங்கு மோதல் ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டும், அங்கு தொடர்ந்து வன்முறை நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment