
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லும் அவர், அங்கு ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment