இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை உறுதி செய்வோம்: பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லி: இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை இலங்கை உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக கடந்த ஆண்டு ஜூலையில் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment