புதுடெல்லி: ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் பரிசு எனக் கூறி மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்விலையை குறைத்துள்ளது. இதுகுறித்து வாக்கு குறையத் தொடங்கினால் பரிசு பொருள்கள் விநியோகம் தொடங்கி விடும் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
சிலிண்டர் விலைக்குறைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "வாக்குகள் குறையத்தொடங்கும் போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிடும். மக்கள் சிரமப்பட்டு உழைத்தப் பணத்தைக் கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் போலியான அக்கறையை வெளிப்படுத்துகிறது. ரூ.400-க்கு விற்பனையாகி வந்த சிலிண்டரை கடந்த 9 1/2 ஆண்டுகளில் ரூ.1,100 வரை உயர்த்தி சாமானிய மக்களின் வாழ்க்கையை சீரழித்து வந்தார்கள். அப்போது ஏன் இந்தப் பாசப்பரிசு நினைவுக்கு வரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment