புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முழு ஆதரவுடன் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது | முழு விவரம்
புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் முழு ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று மாலை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு கூட்டத் தொடரின் 2-வது நாள் நிகழ்வுகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 19-ம் தேதி செயல்படத் தொடங்கியது. இதில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை (நாரி சக்தி வந்தன் அதிநியம்) தாக்கல் செய்து பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment