சமாஜ்வாதி எம்.பி. சட்டை காலரை பிடிக்க முயன்ற சோனியா: பாஜக எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: மக்களவையில் நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியதாவது: கடந்த 2011-ம் ஆண்டு ஐ.மு. கூட்டணி அணி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தபோது, அவர்களின் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை மக்களவையின் மையப் பகுதியில் வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் கடந்த 2012-ம் ஆண்டு பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போதைய காங்கிரஸ் அமைச்சராக இருந்த நாராயணசாமி மசோதாவை தாக்கல் செய்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் எஸ்.சி.பிரிவு எம்.பி யஷ்விர் சிங், அமைச்சர் நாராயணசாமியின் கையில் இருந்த மசோதாவை பறித்துச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment