புதுடெல்லி: சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை இறுதி செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் நிதின்கட்சி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை நாங்கள் இறுதி செய்கிறோம்.கட்டுமான சாதனங்கள் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment