புதுடெல்லி: இந்தியர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய சைபர் முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தி கம்ப்யூட்டர் சாதனங்களை பறிமுதல் செய்தது.
இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: அப்பாவி இந்தியர்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ ஊழல் நடைபெற்றுள்ளது. இது தவிர சைபர் நிதி முறைகேடுகள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிதி உளவுப் பிரிவு அளித்த தகவல்கள்படி இந்த வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment