புதுடெல்லி: ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த 2014-ல் இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை விரைவில் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ கடந்த 7-ம் தேதி அறிவித்தது. வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது ஆகியவற்றை உள்ளடக்கியது இத்திட்டம். இதற்கான ஒத்திகை பணிகளை இந்திய கடற்படை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment