புதுடெல்லி: ராஜஸ்தான் தேர்தலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மீண்டும் போட்டியிடுகிறார்.
ராஜஸ்தானில் பாஜக சார்பில் 2 முறை முதல்வராக பதவி வகித்தவர் வசுந்தரா ராஜே. அம்மாநில மக்களால் ‘மகாராணி’ என்று அழைக்கப்படும் அவர், அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜ குடும்பத்தின் மருமகளாக வந்தவசுந்தரா, அதன் மகாராணியாகவும் உள்ளார். கட்சியின் சக போட்டியாளர்களால் வசுந்தராவைபாஜக தலைமை புறக்கணிப்பதாக புகார் உள்ளது. இதன் காரணமாக அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கி ராஜஸ்தானிலிருந்து வெளியேற்றும் முயற்சியும் நடைபெற்றது. இதற்கு வசுந்தராவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment