காத்மண்டு: இஸ்ரேலில் ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்த 4 நேபாள மாணவர்களின் உடல்கள் காத்மாண்டுவுக்கு வந்தடைந்தன. மாணவர்களின் உடல் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
கடந்த 7-ஆம் தேதி முதல் ஹமாஸ் படைகளும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலுக்கான நேபாள தூதரகம் தெரிவித்தது. மேலும்,10 நேபாள மாணவர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரகம் அண்மையில் அறிவித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment