மும்பை: மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் விசுவாசிகளாக அறியப்பட்ட சிவசேனா எம்.பி.க்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஹிங்கோலி எம்.பி ஹேமந்த் பாட்டீல், நாசிக் எம்.பி ஹேமந்த் கோட்சே ஆகிய இருவர்தான் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ளனர். எம்.பி ஹேமந்த் பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், ஹேமந்த் கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தீவிர விசுவாசிகளாக சொல்லப்பட்டவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எம்.பி.க்கள் இருவரும் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment