விவசாயிகளுக்கு 15-வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி விடுவிப்பு; பழங்குடியினருக்கு ரூ.24,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கினார்
குந்தி: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் உலிஹட்டு கிராமத்தைச் சேர்ந்தபிர்சா முண்டா சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது பிறந்த நாள் (நவம்பர் 15-ம் தேதி) ‘ஜன்ஜதியா கவுரவ் திவஸ்’ (பழங்குடியினர் பெருமை தினம்) என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த 2021-ல்அறிவித்தது. நவ. 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தொடங்கப்பட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், 3-வது பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிஹட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன்மூலம் பிர்சா முண்டாவின் சொந்த ஊருக்கு நேரில் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. பின்னர், பிர்சா முண்டா சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment