பாதம்பஹர்: ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாதம்பஹர் ரயில் நிலையத்தில் இருந்து 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி பாதம்பஹரிலிருந்து முர்முவின் பிறந்த இடமான உபர்பேடாவுக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ரங்பூருக்கு தொடங்கிவைக்கப்பட்ட ஒரு ரயிலில் குடியரசுத் தலைவர் பயணம் செய்து தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது வாழ்நாளில் கணிசமான நேரத்தை ராய்ரங்பூரில்தான் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment