கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (CUSAT) வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 55-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் திறந்தவெளியில் நடைபெற்ற பாடகர் நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது மழை பொழிந்து உள்ளது. அதை தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கரன் தெரிவித்தார். பல்கலைக்கழக கலை விழா அங்கு நேற்று தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment