டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப்பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆறாவது நாளான இன்று இந்தப் பணியில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தயாரிப்பு துளையிடும் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை சொருக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியின்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணியை தொடர முடியவில்லை எனத் தெரிகிறது. மேற்கொண்டு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால் மீட்புப் பணியில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment