புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், க‌ர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் ,விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட உள்ளது.
காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில்,நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு2,600 கனஅடி நீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment