எட்டாவா: உலகக் கோப்பை இறுதிப் போட்டி லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்த சூழலில் இது குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் அகிலேஷ்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment