தத்து கொடுத்தபின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வது சரியல்ல: மும்பை உயர் நீதிமன்றம்
மும்பை: தத்து கொடுத்த பின்பு, பாலியல்வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்வது, அந்த குழந்தையின் நலனுக்கு நல்லதல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு மும்பையின் ஒசிவாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியுடன் பழகி அவரை கர்ப்பமாக்கினார். இதையடுத்து அந்த நபரைபோலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை ஒரு தம்பதி தத்து எடுத்து வளர்த்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment