Skip to main content

Posts

Showing posts from December, 2023

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். கணவன் – மனைவிக்குள் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். ரிஷபம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் திருப்தி தரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வீட்டுக்கு புதிய பொருட்கள் வந்து சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாநில அரசுகள் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த உத்தரவு

ராமேசுவரம்: கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார். ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா அதிவேகமாக வளர்கிறது - ஜெ.பி.நட்டா பெருமிதம்

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: சமூகத்துக்கு அநீதி இழைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தவர்கள் இன்று நியாய யாத்திரை என்ற பெயரில் கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் வளர்ச்சியடையும்போது தான் நாடு வளர்ச்சி அடைகிறது என்பது எங்கள் கற்பனை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“நாட்டின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டேஸ்பூர் : நாட்டின் எல்லைகளை மட்டுமல்லாமல், பாரதத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜாந்த் சிங் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 2014ஆம் ஆண்டுக்கு முன், இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நாடு உலகின் முன்னணி 23 பாதுகாப்பு உபகரண ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய சம்பவங்களை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் இருந்த பகை நீங்கும். நெருங்கிய உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வேற்று மதத்தினர், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது140 கோடி இந்தியர்களும் தீபம் ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தி: அயோத்தியில் ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதிநடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமானநிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கிவைப்பதற்காக நேற்று அயோத்தி சென்ற பிரதமர் மோடியை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

31.12.2023 சோபகிருது 15 மார்கழி ஞாயிற்றுக்கிழமை திதி: சதுர்த்தி காலை 11.56 வரை, பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: மகம் நாள் முழுவதும். நாமேயாகம்: ப்ரிதி பின்னிரவு 3.35 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: பாலவம் காலை 11.56 வரை. பிறகு கெளலவம். நல்ல நேரம்: காலை 7.00-8.00, 11.00-12.00, மாலை 2.00-4.00, 6.00-7.00, இரவு 9.00-11.00 யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30. அஸ்தமனம்: மாலை 5.52. நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 4,7 சந்திராஷ்டமம் திருவோணம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘அந்தஸ்து உயரும்’ - கன்னி ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கன்னி: பிரச்சினைகளை கண்டு அலட்டிக்கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கோபம் குறையும். செலவுகள் அடுத்தடுத்து வரும். கணவர் ஆதரவாகப் பேசுவார். குடும்பத்தில் சந்தோஷம் வரும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் செலவுகள் உங்களை துரத்தும். பயணங்களும், அலைச்சல்களும் அடுத்தடுத்து இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.15,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருகை தரவுள்ளார். ரூ.15,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து லக்னோ மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறியதாவது: பிரதமரின் வருகைக்கு முன்னதாக பிரதமரின் பாதுகாப்புக்காக உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்), தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) மற்றும் பிறபாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த,போக்குவரத்து திசை திருப்பும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் காவல் துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“AI தொழில்நுட்பத்தால் பணியிழப்பு கவலை வேண்டாம்” - நிர்மலா சீதாராமன்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் பணியிழப்பு ஏற்படும் என்ற கவலை வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை - மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “1980-களில் வங்கிகளில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது ஊழியர்களுக்கு மாற்றாக கம்ப்யூட்டர் இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கம்ப்யூட்டர்கள் உள்ளன. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்து கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மீனம் ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள் முழுமையாக | 2024

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) | கிரகநிலை: ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 08-01-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 15-01-2024 அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 18-01-2024 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 27-01-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் பிரியங்கா பெயர்: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் சி.சி.தம்பி. தொழிலதிபரான அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார். கடந்த 2005-2008-ம் ஆண்டில் ஹரியாணாவின் பரிதாபாத் அருகேயுள்ள அமீர்பூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை சி.சி.தம்பி வாங்கினார். டெல்லியை சேர்ந்த எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் அந்த இடத்தை அவர் வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ஹரியாணாவின் அமீர்பூர் கிராமத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் அதே பகுதியில் அதே நிறுவனத்திடம் இருந்து பிரியங்கா காந்தியும் 5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாசனை திரவியம், கலை பொருட்கள் சேரும். ரிஷபம்: வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்கள், சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். புது முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத் தில் பிரச்சினை தீர்ந்து மனநிம்மதி ஏற்படும். அலுவல கத்தில் வேலைபளு குறையும். பணவரவு உண்டு. ரிஷபம்: தாய்வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக புதியவர்களை சந்திப்பீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். தம்பதிக்குள் இருந்த பிணக்கு நீங்கும். எதிர்காலம் பற்றி சில முடிவுகள் எடுப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதாபாத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை: பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில், குஜராத் மாநிலம்அகமதாபாத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து டிச.28, ஜன.4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (09419) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக திருச்சிராப்பள்ளியை அடையும். மறுமார்க்கமாக, திருச்சிராப்பள்ளியில் இருந்து டிச.31, ஜன.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (09420) புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத்தை அடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி விமான நிலையம், ரயில் நிலையம் 30-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது.இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது” - சஞ்சய் சிங்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது என மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சில விளக்கத்தையும் கொடுத்துள்ளார். “என்னால் இந்த தற்காலிக குழுவை ஏற்க முடியாது. ஏனெனில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தன்னாட்சி அமைப்பாகும். அதனால் எனது அனுமதியின்றி இது போன்ற முடிவை எடுக்க முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் நான் பேசுவேன். இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடருவேன். நான் தலைவராக நியமிக்கப்படவில்லை ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றேன்” என சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோரை கொண்ட முதல் உலக தலைவர் பிரதமர் மோடி

புதுடெல்லி: யூடியூப் சேனலில் 2 கோடி பின்தொடர்வோரை கொண்ட முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. உலகத் தலைவர்கள் பலருக்கும் யூடியூப் சேனல் உள்ளது. இதில் அவர்கள் பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் இடம் பெறும். இதை உலகம் முழுவதும் பலர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நேற்று 2 கோடி என்ற இலக்கை கடந்துள்ளது. இந்த இலக்கை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் ஜேர் பல்சனரோ உள்ளார். இவரது யூடியூப் சேனலை 64 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 3-வது இடத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். இவரது யூடியூப் சேனலை 11 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 4-வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். இவரது யூடியூப் சேனலை 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்களுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். பணியில் திறமையை வெளிப்படுத்துவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பழைய வாகனம் செலவு வைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை அதிகாரி அங்கித் கைது விசாரணையை டெல்லிக்கு மாற்றியது அமலாக்கத் துறை

புதுடெல்லி: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டெல்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க, மதுரை அமலாக்கத் துறை அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் புதிய வகை கரோனா பரவுல்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் நேற்று 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கரோனா அலை உச்சத்தில் இருந்தது. 2021 ஏப்ரலில் 2-வது அலை உச்சத்தை தொட்டது. 2022 ஜனவரியில் 3-வது கரோனா அலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதியவகை வைரஸ் பரவலை தடுக்க மாநிலஅரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்!

புதுடெல்லி: பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம் தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் அறிவிப்பு: உ.பி.பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா விடுவிப்பு

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சச்சின் பைலட் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி வதேரா விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சச்சின் பைலட்டை நியமித்து அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தி பேசும் உ.பி., பிஹார் மக்களை தயாநிதி மாறன் இழிவுபடுத்தி பேசுவதா? - ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக கண்டனம்

‘‘உத்தர பிரதேசம், பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’’ என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியதற்கு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு, 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த திமுக எம்.பி. செந்தில்குமார், ‘பசு கோமிய’ மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை நியமித்தது காங்கிரஸ்: பிரியங்கா காந்தி விடுவிப்பு

புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்து வந்த பிரியங்கா காந்தி தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வி அடைந்தது. தெலங்கானாவில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளில், காங்கிரஸ் தலைமை தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: பெரும் உயிர்ச் சேதம் தவிர்ப்பு @ ஹைதராபாத்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை உடனடியாக செயல்பட்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. ஹைதராபாத்தின் மெஹ்திபட்டினம் அருகே உள்ள ஜோதிநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (டிச. 23) மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களிலும் பரவத் தொடங்கியதால் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இதில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஜனவரியில் இந்தியா வர இயலாது என தெரிவித்துவிட்டார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, குடியரசு தினவிழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் பழங்குடி மக்கள் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி மனு

புதுடெல்லி: தமிழகத்தில் பல்வேறு பழங்குடிகளான குருமா, குருமன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர் சமூகங்களின் நலன் குறித்து மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் டெல்லியில் அமைச்சரை நேரடியாக சந்தித்து பேசி அளித்தார். இந்த மனுவில் தருமபுரி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான செந்தில்குமார், லம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இது குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம்: பழங்குடி சமூகமான 'குருமன்ஸ்' என்ற பழங்குடி சமூகத்தின் ஒத்த சொற்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் அங்கீகரித்து இணைப்பதற்கான நீண்டகால முயற்சி தொடர்பாக எழுதுகிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவையில் மேலும் 3 எம்.பி.க்கள் இடைநீக்கம்: பிரதமர் மோடி மீது கார்கே புகார்

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடிஆகியோர் அவையில் விளக்கம் அளிக்கக் கோரி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைகண்டித்து இண்டியா கூட்டணிஎம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய்சவுக் வரை நேற்று பேரணி நடத்தினர். இந்த பேரணிக்குப் பின் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், ‘‘ நாடாளுமன்ற அத்துமீறல் குறித்துவாராணசி, அகமதாபாத் மற்றும் டி.வி.யில் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதில்லை. நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவால் பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும். ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவை பிக்பாக்கெட் என விமர்சித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோரை பிக்பாக்கெட் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பான விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லிஉயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அவரின் இந்த பேச்சு நல்லபண்புடன் இல்லை என்று கூறியநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க எட்டு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த விஷயத்தை இனிமேலும் நிலுவையில் வைத்திருக்கவிரும்பவில்லை என்றும்,இதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் குழப்பம், கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வாகனம் பழுதாகும். திடீர் விருந்தினர் வருகை உண்டு. ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப் பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: நன்கு சரிபார்த்ததாக அமித் ஷா தகவல்

புதுடெல்லி: பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. பழைய காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றும் வகையிலும், நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும் மத்திய அரசு 3 புதிய குற்றவியல் மசோதாக்களை உருவாக்கியுள்ளது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம்தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது, அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அமைச்சரவைக் குழு முடிவை ரத்து செய்க: எம்.பி டி.ரவிகுமார்

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ரவிகுமார் வலியுறுத்தினார். இதற்காக, கடந்த 1965-ல் மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இது குறித்து இன்று (டிச.20, புதன்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-இன் கீழ் பின்வரும் கோரிக்கையை திமுகவின் எம்பியான டி.ரவிக்குமார் பேசியதாவது: கடந்த பிப்ரவரி 9, 2023 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர், ‘உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவேண்டும்’ என கடந்த மே 21, 1965 அன்று அமைச்சரவைக் குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற அத்துமீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது கவலை அளிக்கிறது: பிரதமர் மோடி

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆக கார்கே மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் 4-வது கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன் மொழிந்தார். ஆனால், இதற்கு கார்கே மறுப்பு தெரிவித்து விட்டார். இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லி அசோகாஓட்டலில் நேற்று மாலை நடை பெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர் . உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். அயல்நாட்டு பயணம் ஏற்படும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களுடனான சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரிஷபம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிரச்சினை நீங்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவால் பூர்வீக சொத்து தொடர் பான குழப்பங்கள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லிக்கு 2-வது வந்தே பாரத் ரயில் சேவை; வாரணாசியில் பிரம்மாண்ட தியான மண்டபம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் மிகப்பெரிய தியான மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். முதல் நாளில் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் ஆண்டு நிகழ்ச்சியை நமோ படித்துறையில் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை கருவிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை (ஐஏஎப்) அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐஏஎப் அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில் சூர்யலங்கா விமானப் படை தளத்தில் நடைபெற்ற அஸ்ட்ராசக்தி-2023 பயிற்சியின் போது இந்திய விமானப் படை உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய ‘சமர்’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வெவ்வேறு சூழ்நிலைகளில் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இந்த ஏவுகணை துல்லியமாக நிறைவேற்றியது. இந்த ஏவுகணை அமைப்பு 2 முதல் 2.5 மாக் வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பை வழங்கும். அச்சுறுத்தல் சூழ்நிலைகளைப் பொருத்து சமர் அமைப்பு இரட்டை ஏவுகணைகளை ஏவுவதற்காக இரண்டு ட்ரட் ஏவுதளங்களைக் கொண்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது: 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று சென்றார். இங்கு பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையையும் தொடங்கிவைத்து, அரசு திட்ட பயனாளிகளுடன் பேசினார். பின்னர், பனாரஸ் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரமாவது ரயில்இன்ஜின், வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயில் சேவை, கன்னியாகுமரி முதல் பனாரஸ் வரை செல்லும் காசி தமிழ் சங்கமம் புதியவிரைவு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“சுகாதார மையங்களுக்கு காவி நிறம் பூசினால் மட்டுமே மத்திய அரசின் நிதி” - மம்தா குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டத்துக்கு தேவையான நிதியை நிறுத்தியுள்ளதாக மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இண்டியா கூட்டணியின் கூட்டம் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கும் வகையில் தற்போது அவர் டெல்லி வந்துள்ளார். “டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் பிரதமர் மோடியை எங்கள் கட்சியின் எம்.பி-க்களுடன் நான் சந்திக்க உள்ளேன். மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அதை விடுவிக்கும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கான நிதி இதில் அடங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரபிக்கடல் பகுதியில் கடத்தப்பட்ட மால்டா சரக்கு கப்பலை மீட்க சுற்றி வளைத்தது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மால்டா நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை 6 பேர் கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

1971-ல் பாகிஸ்தானுடனான போரில் உயிர்த் தியாகம் செய்தோருக்கு மோடி, முர்மு மரியாதை

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் 1971-ல் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ராணுவ மாளிகையில் நேற்று நடைபெற்ற ‘அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிலையில் வெற்றி தினத்தைமுன்னிட்டு தனது எக்ஸ் தளத் தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘1971-ல் நடைபெற்ற போரின்போது நமது பாதுகாப்பு படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு விஜய் திவாஸ் (வெற்றி தினம்) தினத்தில் தலை வணங்குகிறேன்’’ என பதிவிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக 6-வது குற்றவாளியும் கைது

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 6-வது குற்றவாளி மகேஷ் குமாவத் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் ஆஜர்படுத்தப்பட்டார். முக்கிய குற்றவாளி லிலித் ஜா, டெல்லியில் இருந்து தப்பிப்பதற்கு இவர் உதவியதாகவும், மற்ற குற்றவாளிகளின் செல்போன்களை அழித்ததாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவையில் கடந்த 13-ம் தேதி வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் தேவி, லலித் ஜா ஆகியோரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் லலித் ஜா உருவாக்கிய பகத் சிங் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். தாங்கள் மத்திய அரசுக்கு தெரிவிக்க விரும்பும் எதிர்ப்பை, மிகுந்த தாக்கத்துடன் எவ்வாறு தெரிவிக்கலாம் என பல திட்டங்களை ஆலோசித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் முதல் முக்கிய நபர் சரண் வரை @ நாடாளுமன்ற அத்துமீறல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்ட 14 எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளியால் 2-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் திடீரென்று, மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி ஓடி, வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். இவர்களுக்கு ஆதரவாக அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ண புகைக் குப்பிகளை வீசி கோஷமிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2014-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.1.16 லட்சம் கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை, அமலாக்கத்துறை பல்வேறு பணமோசடி வழக்குகளில் மேற்கொண்ட சோத னையில் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து எவ்வளவு சொத்துகள் மீட்கப்பட்டுள்ள என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.50,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: துணை முதல்வர் அறிவிப்பு

நாக்பூர்: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.50,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் அடிக்கடி போதைப் பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியின் பேரவை உறுப்பினர் சிவசேனாவைச் (யுபிடி) சேர்ந்த ரவீந்திர வெய்கர் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பட்னாவிஸ் நேற்று அளித்த பதில் பின்வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்