புதுடெல்லி: தமிழகத்தில் பல்வேறு பழங்குடிகளான குருமா, குருமன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர் சமூகங்களின் நலன் குறித்து மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் டெல்லியில் அமைச்சரை நேரடியாக சந்தித்து பேசி அளித்தார்.
இந்த மனுவில் தருமபுரி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான செந்தில்குமார், லம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இது குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம்: பழங்குடி சமூகமான 'குருமன்ஸ்' என்ற பழங்குடி சமூகத்தின் ஒத்த சொற்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் அங்கீகரித்து இணைப்பதற்கான நீண்டகால முயற்சி தொடர்பாக எழுதுகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment