புதுடெல்லி: நிதி கமிஷனில் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான பாஜக அரசின் தலையீடு காரணமாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி பெருமளவு குறைவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான தகவலை தங்களிடம் அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ல் நாட்டில் பிரதமர் மோடியின் ஆட்சி அமைந்தது முதலே மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதி குறைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் நீண்ட ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “14-வது நிதி கமிஷனில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு சட்டத்துக்கு முரணாக மாநிலங்களுக்கு சேர வேண்டிய வரி வருவாயின் பங்கினை களவாடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment