மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பல மாதங்களுக்கு முன்பே இண்டி கூட்டணியை உருவாக்கின. ஆனால் நாடாாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான கே.சி. தியாகி சமீபத்தில் கூட்டணிக்கென ஒரு திட்டமோ அல்லது செயல்வடிவமோ இல்லையென்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ‘இண்டி' கூட்டணியானது பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்றால், கிரிக்கெட் பாணியில் சொல்வதானால் - பேட்டிங்கில் திறமையாக இருந்தால் அதிக ரன்களைக் குவிக்க வேண்டும். அல்லது பந்து வீச்சில் பலமாக இருந்தால் எதிரணியை இத்தனை ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது போல எத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு வேண்டும். அல்லது பாஜகவை எத்தனை இடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment