உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் ‘ராமர் கோயில்’ திறப்புக்கு எதிர்க்கட்சிகள் ரியாக்‌ஷன் என்ன என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராமர் கோயிலில் பூஜைகள் தொடங்கியிருக்கும் சூழலில், கோயில் திறப்பு விழாவை பாஜக அரசியலாக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. அழைப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் என்னென்ன?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment