புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ள நிலையில், அங்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்பியை எதிர்க்க உள்ளார். யூசுப் பதான் அங்கு வெல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
மம்தா Vs ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இண்டியா' கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணிக்கு முக்கிய முகமாக இருந்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் - திரிணமூல் கூட்டணி உடைய மம்தா மீதான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கடும் விமர்சனம்தான் முக்கிய காரணமாகும். இதனை மம்தா பானர்ஜியே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment