புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. தேர்தல்7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் கடந்த 14-ம் தேதி நியமிக்கப்பட்டனர். இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment