Skip to main content

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - முதல்கட்ட மக்களவைத் தேர்தல் தகவல்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்த முக்கியத் தகவல்கள்...

> இன்று (ஏப்.19) 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (பொது - 73, எஸ்சி -18, எஸ்டி - 11) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு 92 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் (வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் தொகுதிக்கேற்ப மாறுபடலாம்).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்