பொதுப்பலன்: பூமி பூஜை செய்ய, நிலம் வாங்க முன்பணம் தர, சித்தர்கள், குலதெய்வத்தை வழிபட, கிரிவலம் வர, அன்னதானம் செய்ய, சொத்து விவகாரம் பேசி தீர்க்க நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்: நினைத்தது அனைத்தும் நிறைவேறும். மனக்குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால்தெளி வடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment