சென்னை: இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இரண்டு ‘டோர்னியர் - 228’ ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை வந்த இந்த விமானங்களுக்கு பராம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய படைப் பிரிவில் 2 அதிநவீன ‘டோர்னியர் - 228’ விமானங்கள் இணைக்கப்பட்டு, அதன் விமானப் படை பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாரம்பரிய முறையில் நீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்ககப்பட்டது. கான்பூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் போக்குவரத்து விமானப் பிரிவில் இந்த விமானத்தில் தொழிநுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment