கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி. இந்தப் பகுதியைத் தியானம் செய்ய தேர்ந்தெடுத்ததற்குத் தனித்த காரணங்கள் இருக்கின்றன. அந்த முக்கியமான மூன்று காரணங்கள் குறித்துப் பார்க்கலாம். உலகத்துக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சும் சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் கன்னியாகுமரியிலிருந்து பார்க்க முடியும். அங்கு கட்டப்பட்டிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வரலாற்றில் தனித்த இடமுண்டு. இந்த நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று (மே 30) முதல் தியானம் செய்து வருகிறார்.
உருவாகிறதா புது சரித்திரம்? - கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக் கடலில் உள்ள பாறையில் தவம் செய்தார். விவேகானந்தரின் ஆன்மிக வாழ்க்கையில் இந்தத் தியானம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக, இந்திய நாட்டை இந்தப் பகுதியிலிருந்து வணங்க வேண்டும் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால், நாட்டில் புது சரித்திரத்தைப் பாஜக படைக்கப்போவதை அடையாளப்படுத்த தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி அங்கு தியானம் மேற்கொள்ளும் நகர்வை எடுத்திருக்கலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment